தானே புயலின் கோரத்தாக்குதலுக்கு ஆளான கடலூரில் 2,000 லிட்டர் பால் இன்று சனியன்று இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, எங்களது சங்கம் சார்பில் 2,000 லிட்டர் பால் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.
கடலூரில் 7-1-2012 அன்று தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்துடன் இணைந்து, அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்ய இருக்கிறோம்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் சவுந்தர்முருகன், அம்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment