Monday, November 4, 2013

முஸஃபர் நகர்: அகதிகள் முகாமிலும் கொடூரம் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம்!

வகுப்புக் கலவரத்திற்கு இரையாகி துயர் துடைப்பு முகாமில் தங்கியிருந்த இளம் பெண்ணை இரண்டு காமவெறி கொண்ட பாசிஸ்டுகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.



முஸஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள புகானா கிராமத்தில் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. ஜோகியா கேரி கிராமத்திலுள்ள முகாமிலிருந்து தன் எட்டு வயது சகோதரியுடன் விறகு சேகரிக்கக் கிளம்பிய 20 வயதான இளம் பெண்ணை புகானாவில் வைத்து கயவர்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.



சச்சின், சுனில் குமார் என்ற பாசிச வெறியர்கள் இந்தக் கொடூரத்தை செய்தது தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் கலவரச் சூழல் நீடிக்கிறது. இந்தக் கொடியவர்களை போலீசிடம் ஒப்படைக்கும் முன்பு மக்கள் கூட்டம் அடித்து உதைத்தது.
மருத்துவப் பரிசோதனையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபணமாகியுள்ளது. இச்சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவோம் என்று அந்த வெறியர்கள் இளம் பெண்ணை மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment