Wednesday, November 6, 2013

படேலை மதவாதி என்று நேரு அழைத்தாராம்! – அத்வானி

புதுடெல்லி: இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலை ஜவஹர்லால் நேரு “மதவாதி” என்று அழைத்ததாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறுகிறார்.


எம்.கே.கே. நாயர் எழுதியுள்ள, “தி ஸ்டோரி ஆப் அன் எரா டோல்டு வித்தவுட் இல் வில்” (The Story of An Era Told Without Ill Will) என்ற புத்தகத்தில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளதாகவும் அத்வானி செவ்வாய்க்கிழமை தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலை மோடியும், பா.ஜ.க.வும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது பல தரப்பினரிடையே அதிருப்தியையும், எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், வல்லபாய் படேலை மதவாதி என்று நேரு குறிப்பிட்டதாக அத்வானி கூறி, புதிய சர்ச்சைக்கு தூபம் போட்டுள்ளார்.

No comments:

Post a Comment