Friday, November 15, 2013

இந்தியன் முஜாஹிதீனுக்கு நிதியுதவி அளிப்பது பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்ஸின் நீண்ட கால உறுப்பினர் சங்கர் சிங் வகேலாவின் அதிர்ச்சி தகவல்!

அஹ்மதாபாத்: இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புக்கு நிதியுதவி அளிப்பது பா.ஜ.க என்று குஜராத் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.
இந்தியன் முஜாஹிதீனின் செயல்பாடு பா.ஜ.கவின் செயல்பாட்டிற்கு இணையானது என்று செய்தியாளர்களிடம் வகேலா தெரிவித்தார்.



காதியானிகளுக்கு நிதியுதவி அளித்து ஆர்.எஸ்.எஸ் அவர்களை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறது.காதியானிகள் இஸ்லாமிய கடமைகளைபின்பற்றினாலும் முஸ்லிம்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.ஆகையால் முஸ்லிம் எதிர்ப்பாளர்களாக மாறிய இவர்களை பா.ஜ.க பயன்படுத்துகிறது என்று வகேலா தெரிவித்தார்.
ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸில் தீவிரமாக பணியாற்றியவர் வகேலா. மேலும் அவர் கூறியது:புத்தகயா, பாட்னா குண்டுவெடிப்புகளில் குஜராத்தொடர்பை குறித்து விசாரணை நடத்தவேண்டும்.குண்டுவெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது குஜராத்தின் ஹாலோல்-காலோலில் என்பது தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ச், குஜராத்தில் உள்ள மோர்பியில் தயாரிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட பைகள்,குஜராத்தில் ஹாலோலில் தயாரிக்கப்பட்டதாகும்.
இதில் இருந்து குண்டுவெடிப்பிற்குசதித்திட்டம் தீட்டப்பட்டது குஜராத்தில் தான் என்பது தெரியவருகிறது. அவ்வாறெனில் குஜராத் போலீஸ் என்னச் செய்தது? இதர மாநிலங்களில் இருந்து மோடியை கொல்ல வரும் தீவிரவாதிகளை(?) கண்டுபிடிக்கும் குஜராத் போலீசுக்கு, சொந்த மாநிலத்தில் நடக்கும் சதித்திட்டம் குறித்து எதுவும் தெரியாது என்று சங்கர்சிங் வகேலா கிண்டலாக தெரிவித்தார்.
அவ்வாறெனில் இது குஜராத் போலீசின் வேலையா? என்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அஹ்மதாபாத் மாவட்ட மருத்துவமனை, எல்.ஜி மருத்துவமனை ஆகியவற்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவின் கரங்கள் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். அன்றைய குண்டுவெடிப்புகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை உள்ளது? என்று வகேலாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு சங்கர்சிங் வகேலா பதிலளிக்கையில்,’நான் நீண்ட காலம் அவர்களுடன் இருந்துள்ளேன்.எனக்கு அவர்களை நன்றாக தெரியும்.அவர்களின் கொள்கைகளையும் தெரியும்.’ என்று தெரிவித்தார்.
கோத்ரா முதல் பாட்னா குண்டுவெடிப்பு வரை அதன் பின்னணியில் இருப்பது பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸுமாகும்.வாக்கு வங்கி அரசியலுக்காக பா.ஜ.க நாட்டை துண்டாடுகிறது.இவ்வாறு வகேலா கூறினார்.

No comments:

Post a Comment