Thursday, July 7, 2011

முத்துப்பேட்டை: ஆசாத்நகரில் தீ விபத்து


முத்துப்பேட்டை ஆசாத்நகர் கடை தெருவில் உள்ள சண்முகா பட்டாணி சென்டரில் அதிகாலை சுமார் 4.30 மணியளவில் திடீரென பெரும் சப்தங்கள் எழுந்தது இடி இடிக்கிரதென்று அக்கம் பக்கத்தினர் இருந்து விட்டனர். ஆனால் தொடர்ந்து சப்தம் வரவே வெளியே வந்து பார்த்த போது தான் தெரிந்ததுதீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.


உடனே அக்கம் பக்கத்தினர் தீ அணைப்பு நிலையத்திற்குதகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவி பக்கத்திலுள்ள காய்கறி கடையும் தீ பற்றிக்கொண்டது. தையடுத்து தீ அணைப்பு வீரர்கள் தொடர்ந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தது நாசமடைந்தன. கடையில் ஏற்ப்பட்ட தீ  விபத்துக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் தீ அதிகமாக பரவக்காரணம் கடையிலுள்ள தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளே காரணம். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் 

SOURCE:MPT FORCE

No comments:

Post a Comment