Friday, July 1, 2011

துரத்தும் சி.பி.ஐ.! ஓடும் சாமியார்!

JULY 01, ஊழல் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு ஆதரவு பிரச்சாரத்தை செய்து வந்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா மாஸ்டர் ராம்தேவின் உதவியாளர் இப்போது சிக்கலில் மாட்டி உள்ளார்.

சாமியார் ராம்தேவ் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பத்து வருடங்களுக்கு முன் ஓட்டை சைக்கிளில் வலம் வந்தவர் இப்பொழுது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.

சமாமியார் ராம்தேவ் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருந்தது மற்றும் போலி மருந்து கம்பனிகள் நடத்தி வந்தது பற்றி    சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இவரது நெருங்கிய உதவியாளர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு பொய் தகவல் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், பாபா ராம்தேவுக்கு நெருக்கமான ஆச்சாரியா பால கிருஷ்ணனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.


உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்த விசாரணை நடைபெற்றது. மேலும், பாலகிருஷ்ணனுக்கு ஹரித்துவார் நகராட்சி அலுவலகம் வழங்கிய இரண்டு பிறப்பு சான்றிதழ்களில் முரண்பாடு உள்ளது.

இது தொடர்பாக, ஹரித்துவார் நகராட்சிக்கு சென்று, பிறப்பு, இறப்பு பதிவேடுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் ஹரித்துவார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.


No comments:

Post a Comment