Saturday, July 2, 2011

'அவன்-இவன்' பாலா மீது மீண்டும் புகார்.


சமீபத்தில் வெளியான, "அவன் இவன்' படத்தில்,
குர்பானி கடமையை இழிவுபடுத்திய இயக்குனர் பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம், தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலர் சீனி அகமது, நகர் தலைவர் ஜெய்லானி ஆகியோர் கடந்த 27 ம் தேதி புகார் மனு அளித்தது நினைவிருக்கலாம். 

இப்போது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் அக்ரம்கான் சென்னை போலீஸ் கமிஷனரிடம்  கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
 

சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது.  
 
எனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment