Friday, July 8, 2011

குஜராத்தில் நல்லாட்சி ஹிந்துதுவாவின் திரிபுவாதம்!

இந்தியாவில் குஜராத்தில்தான் நல்லாட்சி நடக்கிறது என்று  சிலர்  கூறிவருகின்றனர். இவர்கள் மோடியின் பயங்கரவாத ஹிந்துத்துவா ஆட்சியை, சதி திட்டங்களை,  குற்றங்களை மறைக்க திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். 

முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த "குஜராத் ராஜபக்சே'யின் ஆட்சியில் – 17 ஆயிரம் கோடி ரூபாய் குளம் வெட்டும் ஊழல், 260 கோடி ரூபாய் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழல், 600 கோடி ரூபாய் மீன் வளர்ப்பு திட்ட ஊழல் என ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன. 



கிராமங்களில் வறுமையின் கோராத்தாண்டவம்; மக்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு நகரங்களை நோக்கி ஓடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்கள் தாராளமாக ஒதுக்கப்படுகின்றன.அவர்களுக்கு அங்கே 5 ஆண்டுகளுக்கு எந்த வரியும் கிடையாது. 

அன்று மன்னர்கள் ஆட்சியில், இப்படித்தான் ஊர்கள் "தானமாக' உயர்ஜாதி முதலாளிகளுக்கு (சதுர்வேதி மங்கலங்கள்) வழங்கப்பட்டன. அங்கே மன்னனின் எந்த வரி விதிப்பும் நடைமுறைக்கு வராது. அன்று சதுர்வேதி மங்கலங்கள். இன்று அதற்குப் பெயர் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

டாட்டாவின் "நா÷னா' கார் தயாரிப்புக்கு – உற்பத்தி செலவைவிட மோடி கூடுதல் மானியம் தருகிறார். நிலத்தைப் பறிகொடுத்த மக்கள், அரசிடமிருந்து இன்னும் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வில்லை என்று கதறுகிறார்கள். முஸ்லிம்கள் இனப்படுகொலை வழக்கில், மோடிக்கு "நீரோ மன்னர்' என்று பட்டம் சூட்டியது உச்ச நீதிமன்றம் (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்தவன் நீரோ).

இதே நரேந்திர மோடி குஜராத்தில் "லோக் அயுக்தா' என்ற ஊழல் மீட்புக் குழுவை அமைக்க மறுத்து விட்டார் என்பது அசாரேவுக்கு தெரியாது போலும். மக்கள் உயிர்வாழ அடிப்படை தேவையான தண்ணீர் பஞ்சம், சமையல் ஆயில் தட்டுபாடு இதுதான் குஜராத்தின் இப்போதைய நிலை.
இந்தியாவில் ஊழலில் முதலிடம் வகிக்கும் ஒரு மாநிலம்தான் குஜராத்.
மற்றபடி நம்பர் ஒன் மாநிலம் என்பது ஹிந்துதுவாவின் பொய் பிரச்சாரம்

No comments:

Post a Comment