Sunday, July 3, 2011

இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்!

 போர்ப்ஸ்கஞ்ச்: பீகார் மாநிலம், போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு கிராம மக்கள் மீது இந்திய பயங்கரவாத போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

பயங்கரவாத போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக மக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலையை மறித்து சுற்றுச் சுவர் கட்டப்பட்டது.


இதற்கு, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி, கட்டுமானப் பணி நடந்தது. கோபம் கொண்ட மக்கள் போராட்டத்தில் இறங்கினர். நிலவரம் கைமீறவே,  போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.  ஒரு கட்டத்தில் தீவிரவாத போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில்,  26 வயது கர்ப்பிணிப் பெண், ஏழு வயது சிறுவன் உட்பட நான்கு முஸ்லிம்கள்  பலியாகினர். மேலும், கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை, அடித்துத் துவைத்த போலீசார், அவரது முகத்தில் ஏறி நின்று ஆடுவது போன்ற வீடியோ காட்சியும் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


முஸ்லிம் கிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக முஸ்லிம்களை கொலை செய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என மனித உரிமை போராளி ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

இந்நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், நேற்று போர்ப்ஸ்கஞ்ச் வந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்ட அன்சாரி என்ற 16 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அவனை டில்லிக்குக் கொண்டு செல்லும்படி, மாநில காங்கிரஸ் தலைவர் சவுத்ரி கைசரை அறிவுறுத்தினார்.

இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில், இந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும்,  6மாத பிஞ்சுக்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.

சிந்திக்கவும்: தீவிரவாதத்தின், பயங்கரவாதத்தின் மறு உருவம்தான் ஹிந்துத்துவா இயக்கங்களும், இந்திய காவல் துறையும் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொன்று குவித்தது ஒரு கர்ப்பிணி பெண்ணை, ஏழு வயது சிறுவனை. எப்படி இந்த கயவர்களுக்கு ஒரு கர்ப்பிணி பெண்மேல் துப்பாக்கி சூடு நடத்த மனம் வருகிறது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. பெண்கள் என்றால் பேயும் இறங்கும் என்பார்களே.


இதுபோல்தான் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தீயில் போட்டு கருக்கினார்கள். அதை குறித்து அவர்கள் பெருமையாக வேறு பேசி கொண்டார்கள் இந்த குழந்தை வெளியே வந்தாலும் ஒரு நாள் எங்கள் கைகளால்தான் சாகப்போகிறது. அதனால் தான் இப்பவே கொல்கிறேன் என்று வீரவசனம் பேசி இருக்கிறார்கள் ஹிந்து பயங்கரவாதிகள்.

மேலும் முஸ்லிம் பெண்களை கூட்டம் கூட்டமாக சேர்ந்து கற்பழித்து தீ மூட்டி அதில் உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார்கள். இவர்களை மிருகங்கள் என்று சொல்லி வாயில்லா ஜீவன்களை கேவலப்படுத்த விரும்பவில்லை இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள். இந்தியாவை ஆட்டி படைக்கும் ஹிந்து பயங்கரவாதம் குறித்து மக்கள் விழிப்படைய வேண்டும். இதற்கெதிராய் போராட முன்வரவேண்டும்.


No comments:

Post a Comment