Monday, July 18, 2011

யோகா ராம்தேவ் மீது கடத்தல் வழக்கு.

யோகா குரு ராம்தேவுக்கு சொந்தமான இயற்கை வைத்திய தொழிற்சாலை அரியானா மாநிலம் நர்னால் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து கடுகு எண்ணெய் பாரத்தை டேங்கர் லாரியில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு எடுத்து சென்றனர். அந்த லாரியையும், அதன் டிரைவர் ஹனுமான் என்பவரையும், கடத்திச்சென்று விட்டதாக ஜெய்ப்பூர் கோர்ட்டில் லாரியின் அதிபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் யோகா குரு ராம்தேவ், அவரது உதவியாளர் பால கிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'ராம்தேவ் உள்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
நன்றி; தினத்தந்தி 

No comments:

Post a Comment