Tuesday, June 28, 2011

தமிழக அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு மார்க்!


மிழகத்தில்  அதிமுக  ஆட்சி அமைத்தவுடன் அமைச்சர்கள் பொறுப்பேற்று, எம்.எல்.ஏ. பதவியேற்பு நடைபெறும் தருவாயில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மரியம்பிச்சை திருச்சி அருகே கார் விபத்தில் பலியானார்.      
 
இதையடுத்து   மரியம்பிச்சைக்கு ஒதுக்கப்பட்ட துறையினை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரான சின்னையாவுக்கு வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா அமைச்சரவையில் முஸ்லிம்களின் பிரதித்துவம் இல்லை என்ற குறை ஆங்காங்கே முஸ்லிம் சமுதாயத்தில் எதிரொலித்தது. இந்நிலையில்,     
 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் அவர்களை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. வரும் புதன்கிழமை சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். இது ஓரளவுக்கு சந்தோஷமான செய்தி என்றாலும் முஸ்லிம்களின் சதவிகிதத்திற்கு ஏற்ற அளவில் இல்லை. எனவே இன்னும் இரண்டு முஸ்லிம் அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா நியமிக்கவேண்டும். புதிய அமைச்சரின் பணி சிறக்க, அவரால் முஸ்லிம் சமுதாயம் பலன் பெற பிரார்த்திக்கிறோம்.

 

No comments:

Post a Comment