Monday, June 20, 2011

சிறுமியின் கண்களை கத்தியால் குத்தி கற்பழிப்பு!

JUNE 19,  உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் 14 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு மீண்டும் ஒரு கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டம் குர்புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி. 14 வயதான அவளை அந்த கிராமத்தைச் சேர்ந்த குல்தீப், நிரஞ்சன் ஆகியோர் கற்பழிக்க முயன்றனர். இதை தடுக்க சிறுமி போராடினார்.


இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறுமியின் கண்களை கத்தியால் குத்தி கற்பழித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் அந்த சிறுமியின் இடது கண் பார்வை பறிபோனது. வலது கண் அதிகமாக சேதம் அடைந்து உள்ளது.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய மறுத்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

சிந்திக்கவும்: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும் நாடுகளில் இந்தியா இப்பொழுது 4 வது இடத்தில் இருக்கிறது போகிற போக்கை பார்த்தால் சீக்கிரம் முதலிடத்தை அடையும் என்று சொல்லலாம்.


அதுபோல் இந்த போலீஸ் துறை இவர்களை போலீஸ் என்று சொல்வதை விட கிரிமினல்கள் என்று சொல்லலாம் வேலியே பயிரை மேய்வது போல, இந்த கொடியவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் முதலில் கொண்டுவரவேண்டும்.

பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் வேறு எங்கும் இல்லை அதன் மொத்த உருவமே காவல்துறைதான். இந்த கயவர்கள் துறையை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர மக்கள் போராடவேண்டும்.

இல்லையேல், வீரப்பன் போல ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும் இவர்களை அழித்தொழிக்க, பல்லாயிரக்கணக்கான நக்சல்பாரிகள் வேண்டும் இவர்கள் கொட்டத்தை அடக்க. அப்படியாவது இவர்கள் திருந்துகிரார்களா என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment