இஸ்லாமாபாத், ஜூன் 10: பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் வேன் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 14 மாணவர்கள் இறந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரிலுள்ள அலிபெய்க் பகுதியிலிருந்து மிர்பூர் பகுதிக்கு 22 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது. மிர்பூர் பகுதியில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 14 மாணவர்கள் இறந்தனர். 3 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். மற்ற மாணவர்களின் நிலைமை குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment