Monday, June 6, 2011

வெளிநாடுகளை ஆக்கிரமித்துள்ள இந்திய ஹிந்துத்துவா!!

JUNE 6, ராம்தேவுக்கு ஆதரவாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உண்ணாவரதம் இருந்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்.  மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக விஸ்வஹிந்து பரிசத்தின் பல்வேறு கிளைகள் அமெரிக்காவில் எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவர்களோடு சேர்ந்து அமெரிக்காவில் உள்ள மற்ற ஹிந்துத்துவ இயக்கங்களும் சேர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.


சிந்திக்கவும்: இதற்க்கு முன்னாள் இந்தியாவில் எத்தனையோ பெரிய சம்பவங்கள் நடந்தன, ஈழத்திலே அம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
இந்த இனப்படுகொலையை பார்த்து உலகமே கண்ணீர் வடித்தது எங்கே போனார்கள் இந்த ஹிந்துத்துவாவாதிகள். இதுவரை இந்தியாவில் நடந்த ஏதாவது ஒரு பிரச்சனைக்காவது இவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்களா?

கார்கில் யுத்தம் நடந்தது, சுனாமி பேரழிவு நடந்தது, ஈழப்படுகொலை நடந்தது இப்படி ஏதாவது ஒன்றிற்காக இவர்கள் கண்ணீர் விட்டார்களா இல்லை கவலை பட்டார்களா?

இப்போது எங்கிருந்து வந்தார்கள், எல்லாம் ஹிந்துத்துவா மாயை, இந்தியாவை ஹிந்து நாடாக்கலாம் என்ற ஹிந்துதுவாவின் கனவு, அந்த கற்பனை கனவுக்கு உயிர் கொடுக்க இவர்கள் அமெரிக்காவில் கோடி பிடிகிறார்கள்.

No comments:

Post a Comment