Monday, June 6, 2011

இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள்!! மோடி அறிவிப்பு!!

ஆமதாபாத், ஜூன் 6:   பாபா ராம்தேவோடு   உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்:  *   இந்திய வரல்லாற்றில் எது மோசமான நாள் தெரியுமா? திருவாளர் மோடி அவர்களே, உங்கள் காவி கும்பலைச்சேர்ந்த கோட்சே தேசபிதா காந்தியை கொன்றது இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் யாராலும் மறுக்க முடியாது.


*   உங்கள் தலைமையில் குஜராத் இனப்படுகொலைகளை நடத்தினீர்களே, ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவித்தீர்களே, அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் இல்லை என்று மறுப்பதற்கில்லை.


*   நீங்கள் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் ரத யாத்திரை என்று ஒரு ரத்த யாத்திரை நடத்தினார்களே, அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.


*   மீரட், பாகல்பூர், பீவாண்டி, மும்பை, குஜராத், இப்படி இனக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தி சிறுபான்மை மக்களை கொன்று குவித்தீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.

*   உங்கள் காவி பயங்கரவாதிகள் 'ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியாரையும், அவர் குழந்தைகள் இருவரையும்' கொடூரமாக எரித்து கொன்றார்களே, அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் மறுக்க முடியாது.


*   கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கி, கன்னியாஸ்திரி பெண்களை கற்பழித்தீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான நாள்தான்


*   பாபர் மசூதி என்ற பிறமத வழிபாட்டு தளத்தை உடைத்து, இந்தியாவின் மதச்சார்பின்மையை சீர் குலைதீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.


*   உங்கள் "ஹிந்துத்துவா காவி ஆட்சியை" இந்தியாவில் ஏற்ப்படுத்த வேண்டும் என்று 'சம்ஜாஉதா ரயில் குண்டு' வெடிப்பு முதல் 'மக்கா மஸ்ஜித் தொடர் குண்டு வெடிப்புகள் வரை நடத்தினீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.




*   இவையெல்லாவற்றையும் மறைக்க பாபா ராம்தேவ் என்ற ஓலை பாம்பை அனுப்பி, ஊழல் ஒழிப்பு நாடகம் போடுகிறீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.

*   ஒரு சாதாரண தடி அடி நடத்தியதற்கு, இப்படி குதிக்கும் 'இந்த காவி பயங்கராவாதி மோடிதான்' குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான 'ஒரு மாபெரும் இன அழிப்பையே' முன்னின்று நடத்தினார்.

*   இந்த மோடியை, 'இந்திய சிந்தனையாளர்கள்' ஸ்ரீலங்கா இனப்படுகொலை 'பயங்கரவாதி ராஜபக்சே' உடன் ஒப்பிடுகிறார்கள். இவரது ஆட்சியில்தான் லஞ்சம், ஊழல், குடிநீர் பற்றாக்குறை இப்படி மக்கள் அவதிப்படுகின்றனர்.

*   இந்த 'காவி பயங்கரவாதிகள்' ஆட்சி செய்யும் கர்நாடகா மாநிலத்தில் ஊழலும், லஞ்சமும் மலிந்து, குடுமிச்சண்டை நடக்கிறது அதைப்பற்றி இதுவரை யாரும் வாய்திறக்கவில்லை.

*   இவரது பயங்கரவாதத்தை பார்த்த மேற்க்கத்திய நாடுகள் இவருக்கு விசா வழங்க மறுத்து கேவலப்படுத்தியது. இந்தியாவின் ஒரு மாநில முதல்வருக்கு வெளிநாட்டு விசா மறுக்கப்பட்டது மொத்த இந்தியாவிற்கே அவமானம்.

*   இப்படி பட்ட யோகியர்தான் சொல்கிறார் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் மீது தடி அடி நடத்தியது தவறு என்று. இதை சொல்ல இவருக்கு எந்த யோகிதையும் இல்லை.

*   மேலும் இந்த ஊழல் எதிர்ப்பு என்பதே ஹிந்துத்துவாவை இந்தியாவில் நிலை நிறுத்தும் ஒரு பார்பன தந்திரமே அல்லாமல் வேறில்லை. இந்த நரபலி நாயகர்களை கடும் சட்டம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment