Tuesday, June 7, 2011

ஜே! ஜே! போலீசுக்கு! ஜே! ஜே!

JUNE 7,  கள்ள பணத்திற்கு எதிராக சத்யாகிரகம் இருந்த டெல்லி ராம்லீலா மைதானதிற்கு ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் கோத்ரா மாடலில் தீ வைப்பு நடத்தி அதன் மூலம் கலவரங்கள் நடத்த திட்டம் தீட்டி இருந்ததாகவும்,

இதை முன்பே ரகசிய போலிசார் அறிந்ததினால் தான் அந்த மைதானத்தில் இருந்த ஆட்களை போலீஸ் நீக்கம் செய்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 
போலீஸ் சொல்லும் இந்த சம்பவம் நூறு சதமானம் உண்மை என சமூக நீதி போராளி சப்னம் ஆஷ்மி கூறி உள்ளார்.



இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அந்த மைதான பந்தலுக்கு தீ வைத்து விட்டு அதன் பேரில் குஜராத்தில் நடந்ததை போல் நாடு முழுவதும் கலவரம் நடத்த திட்டம் தீட்டி
 இருந்தனர்இதற்க்கானஅனைத்து ஆதாரங்களும் தன் வசம் இருப்பதாகவும் இதை நான் எங்கு வேண்டும் என்றாலும் சொல்வேன் என்றும் "இந்த காவி பயங்கரவாதிகள் இப்படி ஒரு சதி திட்டம் தீட்டி இருக்கிறார்கள்" என்று நான்தான் போலீசிடம் தெரிவித்ததாகவும் கூறினார். 

எப்படியோ பெரிய சதி திட்டம் முறியடிக்க பட்டது.
 நம் நாடு சுதத்திரம் அடைத்ததில் இருந்து இது வரை இவர்கள் ஆயிரத்திக்கும் அதிகமாக கலவரங்களை நடத்தி இருக்கிறார்கள். இவர்கள்மட்டும் கலவரங்களை நடத்த வில்லையென்றால்? நம் நாடு சீனாவை விட ஏன்? உலகத்திலேயே பெரிய வல்லரசாக மாறியிருக்கும்! 
காவி பயங்கரவாதிகள் என்று ஒழிக்கப்படுகிறார்களோ அன்று தான் நம் நாடு முன்னேறும்! இது நிச்சயம்!

No comments:

Post a Comment