Saturday, June 11, 2011

மின்வெட்டு நேரம் 2 மணிநேரமாகக் குறைப்பு - ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு நேரம் 2 மணி நேரமாகக் குறைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசினார்.

அப்போது, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் ஆக்கப்படும், மின்சார வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும்,





தற்போது, எனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், வரும் ஜுலை மாதம் முதல் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும். படிப்படியாக, மின் வெட்டே இல்லா மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில், 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தமிழ்நாடு மின் வெட்டே இல்லாத மாநிலமாகத்தான் இருந்தது. இன்னும் அதிகமான மின் நிறுவுத் திறனுடன் அதைவிட சுபிட்சமான நிலையை இந்த ஆட்சிக் காலத்தில் அடைவோம் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.


No comments:

Post a Comment