Monday, June 13, 2011

பாகிஸ்தானில் அமெரிக்க உளவாளி கைது


இஸ்லாமாபாத்,ஜூன் 12: பாகிஸ்தானில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் மேத்யூ கிரெய்க் பேரட்(27). இவர் இஸ்லாமாபாத் அருகே பெத்ஜங் என்ற இடத்தில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் போலீஸôர் இவரை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தி ராவல்பிண்டி சிறையில் அடைத்தனர்.





 ÷முன்னதாக பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு இவருக்கு கடந்த 4-ம் தேதி பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் இவர் பெத்ஜங் பகுதியில் இருந்து தப்பித் தலைமறைவானார். இதையடுத்து பாகிஸ்தான் போலீஸôர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இவரைக் கைது செய்தனர்.

 ÷ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேத்யூ பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.



No comments:

Post a Comment