Thursday, June 9, 2011

திருடர்களில் இவர்கள் தனி ரகம்!

பார்சிலோனா, ஜூன் 8: திருட்டு என்பது அனைவராலும் வெறுக்கப்படும் தொழில் என்றாலும் சில திருடர்களின் திருட்டு முயற்சிகளைப் பார்த்தால் வியப்பும் திகைப்பும் சில சமயங்களில் நகைப்பும் ஏற்படுகின்றன.




ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்த 2 திருடர்களின் கூட்டணி அடித்த கொள்ளை இந்த ரகத்தைச் சேர்ந்தது. விமான நிலையத்துக்கு வந்து சேரும் பயணிகளின் லக்கேஜ் பைகளில் திருட்டுப்போவது குறித்து அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அந்த விமானநிலையத்துக்கு வந்த லக்கேஜ் வேனில் திடீரென ஏறி சோதனையிட்டனர். அப்போது மிகப்பெரிய சூட்கேஸ் ஒன்றைப் பார்த்தபோது அதன் ஜிப் பூட்டப்படாமல் எளிதில் திறக்கும் விதத்தில் இருந்ததால் சந்தேகப்பட்டனர்.

 உடனே அதன் ஜிப்பைக் கழற்றியதும் உள்ளே ஒருவர் கை, கால்களை முடக்கி ""தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தையைப் போல' படுத்திருந்தார். அவரைத் ""தட்டி'' எழுப்பி, விசாரித்ததில் உண்மையைக் கக்கிவிட்டார். விமான நிலையத்துக்கு வரும் அந்த லக்கேஜ் வண்டியில் அவரை சூட்கேஸில் அடைத்து அவருடைய நண்பர் ஏற்றிவிட்டு விமான நிலையத்துக்கு வேறு வண்டியில் போய்விடுவாராம். அந்த லக்கேஜ் வேனை விமான நிலையத்தில் மீண்டும் திறக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகுமாம்.
 அந்த இடைவெளியில் அவர் சூட்கேûஸத் திறந்துகொண்டு வெளியே வந்து மற்ற சூட்கேஸ்களைத் தேட்டைபோடுவாராம். விலையுயர்ந்த நகைகள், தங்கம், வைரம், நவரத்தினங்கள், கடிகாரங்கள், செல்போன்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் தனது சூட்கேஸில் வந்து உட்கார்ந்துகொண்டு மூடிவிடுவாராம். பிறகு அவரை ஏற்றிவிட்ட நண்பர் நிலையத்துக்கு வந்து சூட்கேûஸ எடுத்துச் சென்றுவிடுவாராம். சூட்கேஸில் இருந்தவரையும் அவருடைய நண்பரையும் போலீஸôர் கைது செய்துள்ளனர்.
 

No comments:

Post a Comment