Saturday, June 4, 2011

சாமியார் பாபா ராம்தேவ் என்கிற ஓலை பாம்பு!!

JUNE 4, ஊழலுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சாமியார் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப்போவது, பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்தார்.

திக்விஜய் சிங் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது, பாபா ராம்தேவை சன்னியாசி என்று சொல்ல முடியாது. அவர் ஒரு நல்ல வியாபாரி.

யோகா சொல்லி கொடுப்பதற்கு கூட அவர் விதம், விதமாக பணம் வசூலிக்கிறார். யோகா வகுப்பில் முன்வரிசையில் இருக்க ரூ.50 ஆயிரம் வசூலிக்கிறார். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கடைசி வரிசையில்தான் இருக்க முடியும்.


இது வியாபாரம் இல்லாமல் வேறு என்ன?  ராம்தேவால் காங்கிரஸ் குழப்பமோ, பீதியோ அடைய வில்லை. ஊழலை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிந்திக்கவு: ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதால் ஊழலை ஒழித்து விட முடியாது. இவர் யோகா ஒருவியாபாரி, இவர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் யோகா பயிற்சியாளர்.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் முகமுடி பாரதிய ஜனதா பார்ட்டி. அந்த கட்சி இந்தியாவில் செத்தபாம்பாகி போன நிலையில், இந்த செத்த பாம்பு ஒரு ஓலை பாம்பை காட்டி அரசை பயம் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

ஊழலை உண்மையில் ஒழிக்க யார் புறப்பட்டாலும் அவருக்கு நமது வாழ்த்துக்கள்.  அதே நேரம் இதை அரசியலாக்கி ஆதாயம் தேடநினைக்கும்
ஹிந்துத்துவா மதவெறி கட்சிகளை நாம் அனுமத்திக்க முடியாது.

இந்த சாமியார் ராம்தேவ் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து 1100 கோடிகளுக்குமேல் எப்படி அதிபதி ஆனார்.  ஒரு பண்டார,  பரதேசிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது.

நிச்சயம் நியாயமான முறையில் சம்பாதித்ததாக இருக்க முடியாது என்பது உண்மை. இந்த சாமியாரை ஹிந்துத்துவா களம் இறக்கியிருப்பதால் இந்த பார்பன நாளிதழ்கள் இவரை தூக்கி பிடிக்கின்றன அவ்வளவே.

No comments:

Post a Comment