Sunday, June 12, 2011

ராணா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: அமெரிக்கா

வாஷிங்டன், ஜூன் 11: மும்பை தாக்குதல் வழக்கிலிருந்து தஹவூர் ராணா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 


பாகிஸ்தானில் பிறந்து, அமெரிக்க குடியுரிமைப் பெற்ற தஹவூர் ராணாவுக்கு, மும்பை தாக்குதல், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் அளித்தது,டென்மார்க்கில் தாக்குதல் நடத்த சதி தீட்டியது உள்ளிட்டவற்றில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டார். சிகாகோ நீதிமன்றத்தில் 12 பேரடங்கிய நீதிபதிகள் குழு ராணா குற்றமற்றவர் என வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. நீதிபதி ஹாரி டி லெனின் வெப்பர் அளித்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக இந்தியா கருத்து தெரிவித்திருந்தது.



 இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டம் எதுவுமில்லை என அமெரிக்காவின் நீதித்துறை அறிவித்துள்ளது



No comments:

Post a Comment