Wednesday, June 8, 2011

ஆயுத போராட்டதிற்கு அழைப்பு விடுக்கும் பயங்கரவாத சாமியார்!!

JUNE 8, மத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போலி சாமியார் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.

நள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது. போலீசார் நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்தனர்.


இந்த சம்பவம் குறித்து ஹரித்வாரில் நேற்று பேட்டி அளித்த ராம்தேவ், மத்திய அரசை மன்னித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.

ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும். அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம்.  இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம். அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும்.


அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.

சிந்திக்கவும்
: இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதம், இவர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் என்பதே ஒரு கண்துடைப்பு.  இவரிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.

இவருக்கு சொந்தமாக வெளிநாட்டில் ஒரு சொகுசு தீவே இருக்கிறது.
இது ஒன்றும் இவர் உழைத்து சம்பாதித்தது இல்லை. இந்த சொத்துக்கள் எல்லாம் மக்கள் பணம்.

இந்த மக்கள் பணத்தை வைத்துதான் இவர் தனி விமானத்திலும், ஹெலிஹாப்டர்களிலும் சுத்துகிறார். மேலும் விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களில் வளம் வருகிறார்.

இந்தியாவில் நடந்த எத்தனையோ போராட்டங்களில் போலீஸ் தடியடி நடத்தியது. அப்போது எல்லாம் யாரும் ஆயுதத்தோடு வரவேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி ஆயுதம் எடுக்கவேண்டிய சூழல்கள் இந்தியாவில் பல சந்தர்ப்பங்களில் இருந்ததும், யாரும் அப்படி செய்யவில்லை.


ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு தமிழக மக்கள் ஆயுதம் தூக்கி இருக்கவேண்டும். ஏன் என்றால் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட இந்திய அரசு ஆயுதம் கொடுத்து உதவியது.

காஷ்மீரிலே மக்கள் அமைதி போராட்டம் நடத்தினார்கள் இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இதுவரை பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.  ஆனால் அந்த மக்களும் ஆயுதம் எடுக்கவில்லை.


ஆனால் போலீஸ் தடியடி கூட முறையாக நடத்தவில்லை இவர்களே ஒருவர்மீது ஒருவர் விழுந்தது காயம் பாட்டதுதான் அதிகம் என்று நேரடி செய்திகள் சொல்கின்றன.

இவர்கள் தங்கள் ஹிந்த்துதுவாவை நிலை நிறுத்த ஒரு ஆயுத போராட்டத்திற்கு தயாராவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பயங்கரவாதி பால்தாக்ரேயை கைது செய்யச்சொல்லி கோர்ட் ஆர்டர் இருந்தும் கைது செய்ய முடியவில்லை. பயங்கரவாதி பால்தாக்ரே சொன்னான் என்னை தொட்டால் மும்பையே பற்றி எறியும் என்று.


அதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.


அதுபோல் பாபர் மசூதியை உடைத்து கலவரம் செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி ஆகியோர் மீது கடுமையான வழக்குகள் இருந்தும் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

ஆனால் ஒரு தடியடிக்கு எதிராக ஆயுதம் தூக்கி அரசுக்கு எதிராக போராட்டமாம். இந்தியா எந்த அளவுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிக் கிடக்கிறது என்பதை இப்போது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.




No comments:

Post a Comment