Saturday, June 4, 2011

அந்தமானில் நில நடுக்கம் மயிலாப்பூர்-தி.நகரில் லேசான நில அதிர்வு


அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவில் நேற்று மதியம் 12.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி இருந்தது. அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
 
தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதே போல நுங்கம்பாக்கம், அண்ணாசாலை பகுதியில் உள்ள பெரிய கட்டிடங்களில் இருந்தவர்கள் இந்த நில அதிர்வை உணர்ந்து உள்ளனர்.
 

இந்த நில அதிர்வு காரணமாக அலுவலகங்கள், வீடுகளில் இருந்தவர்கள் பயந்து போய் வெளியே வந்தனர். அந்த பகுதிகளில் நில நடுக்க பீதியாக இருந்தது. அந்தமானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதை வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியது. அந்தமானில் நில நடுக்கம் எற்படும்போது இங்கு லேசான நில அதிர்ச்சி ஏற்படுவது இயல்பானது என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment