Saturday, June 11, 2011

அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரம்: ராம்தேவ் வெளியிட திக்விஜய் வலியுறுத்தல்

போபால், ஜூன்10: ராம்தேவின் பல்வேறு அறக்கட்டளைக்களுக்கு நன்கொடையாக அளித்தவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.




ஊழல்,கறுப்புப் பணம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாபா ராம்தேவை வலுக்கட்டாயமாக கடந்தவாரம் போலீஸôர் அப்புறப்படுத்தி ஹரித்துவாருக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்குக்கு ராம்தேவின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில், போபாலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், பாபா ராம் தேவ் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். ராம்தேவ் நடத்தும் அறக்கட்டளைகள் கறுப்புபணம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.



No comments:

Post a Comment