Wednesday, October 23, 2013

முத்துப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்பனை ஒருவர் கைது!

முத்துப்பேட்டை, அக்டோபர் 23: முத்துப்பேட்டை பகுதியில் வெளிமாநில லாட்டரி சிட்டுகள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதனால் முத்துப்பேட்டை காவல் துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 






இந்த நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் முத்துப்பேட்டை பழைய போஸ்டாபீஸ்; தெருவை சேர்ந்த செல்வராஜ்(65) விற்பனை செய்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சோதனையில் ஈடுப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் முருகைய்யன் மடக்கி பிடித்து கைது செய்தார். அவரிடமிருந்து ஏராளமான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தார். பின்னர் செல்வராஜை திருத்துறைப்பூண்டி கோர்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment