Tuesday, October 15, 2013

சதி வேலை முறியடித்தபோலீஸார் வெடிமருந்து பதுக்கிய ஜெயபாலைபோலீஸார் கைது செய்தனர்

முத்துப்பேட்டை அருகே வீட்டில் வெடிமருந்து பதுக்கிய ஆசாமியை, போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஜாம்பவான் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால், 40. இவரது வீட்டில் வெடிமருந்து பதுக்கி வைத்திருப்பதாக, முத்துப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில், நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு சோதனை நடத்தினர்.
இதில், ஒன்றரை கிலோ வெடிமருந்து மற்றும் வெடி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஜெயபாலை கைது செய்து, முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment