Wednesday, October 2, 2013

விசுவ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளை புறக்கணிக்கப்பட்டது!

Sep 30/2013: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை தனியாக கொண்டாட உலக மத பாராளுமன்ற அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளையான வி.ஹெச்.பி.ஏ. (Vishwa Hindu Parishad of America) ஏற்பாடு செய்த விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை புறக்கணிக்க ஏற்கனவே உலக மத பாராளுமன்ற (Council for World Parliament of Religions)அமைப்பு தீர்மானித்திருந்தது.



இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பா.ஜ.க. உள்ளிட்ட இந்தியாவில் உள்ள எந்த ஹிந்துத்துவா அமைப்புகளுடனும் தங்களுக்கு தொடர்பில்லை என்று விசுவ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளை கூறியிருந்தது. ஆனால், இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி (C.A.G.) உலக மத பாராளுமன்ற அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் VHPA மற்றும் இந்தியாவில் உள்ள VHPக்கும் இடையேயான உறவுகளை விவரிக்கும் ஏராளமான ஆதாரங்களை குறிப்பிட்டிருந்தது.

பிரிவினையை தூண்டும் அமைப்புகளை புறக்கணிக்கவும், விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை தனியாக கொண்டாடவும் உலக மத பாராளுமன்ற  அமைப்பு (Council for World Parliament of Religions) எடுத்த முடிவை C.A.G.யின் செய்தி தொடர்பாளர் டாக்டர் ராஜா சுவாமி பாராட்டியுள்ளார். இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரும் சுப்ரமணிய சுவாமிதான் VHPA. (Vishwa Hindu Parishad of America) ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் முக்கிய உரையை நிகழ்த்தி உள்ளார் ன்து குறிப்பிடத்தக்து.

No comments:

Post a Comment