Tuesday, October 29, 2013

ராகுல் காந்தியின் கருத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு!

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய ராகுல்காந்தியின் பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.



உத்தர பிரதேச மாநிலம் முஸஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ யுடன் தொடர்பு இருப்பதாக கூறிய ராகுல் காந்தியின் கருத்தை ஆர்.எஸ்.எஸ் வரவேற்றுள்ளது.
இது குறித்து ஆர்எஸ்எஸ் இணை செயலாளர்  தத்தாத்ரேய ஹோசபெல் கூறுகையில், "ராகுல் கூறியதில் எந்த தவறும் கிடையாது. அவர் கூறுவதுபோல் நாட்டில் தீவிரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
ராகுலின் கருத்திற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment