Saturday, October 26, 2013

முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பாக ஜும்மாவிர்க்கு பிறகு தீவிர உறுப்பினர் சேர்க்கை!

இந்தியா  முழுவதும்  SDPI கட்சி சார்பாக தீவிர உறுப்பினர் சேர்கை  பிரசாரம் நடைபெற்று வருகிறது,முத்துப்பேட்டையிலும் தீவிர உறுப்பினர்  சேர்கை கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.இதன்  ஒரு பகுதியாக நேற்று ஜும்மாவிற்கு  பிறகு உறுப்பினர் சேர்கை முத்துப்பேட்டையில் குட்டியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.







இந்த உறுப்பினர் சேர்கை பற்றி நமது நீருபர் மாவட்ட தலைவர் நெய்னா  முஹமது  விடம் கேட்டபோது.இந்திய முழுவதும் நடைபெற்று வரும் இந்த உறுப்பினர் சேர்கை பிரசாரம்.முத்துப்பேட்டையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான மக்கள் தானாகவே முன்வந்து  SDPI யில் தங்களை இணைத்து கொள்கின்றனர்.


மேலும் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் SDPI கட்சி முத்துப்பேட்டையில்  இரண்டாம் இடம் பெற்றது .மேலும் முத்துப்பேட்டை பெருரட்சியின் பிரச்சனைகளப் முன்வைத்து பல போரட்டங்களை நடத்தி  வருகிறோம். 


இதனால் SDPI கட்சியின்  மேல் முத்துப்பேட்டை    பொதுமக்களுக்கு     நல்ல அபிபிராயம்      உள்ளது       இதனால்     முத்துப்பேட்டை    மக்கள் தாங்களாகவே பெருமளவில் இந்த கட்சியில்  இணைத்து வருகின்றனர்.  பெரியவர்கள்,  இளைஞர்கள் மற்ற கட்சியில் உள்ள உறுப்பினர்களும் SDPI கட்சியில் இணைத்துள்ளனர். இதுவரை 1000 மேற்பட்டோர் இந்த மாதம் SDPI இணைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment