Tuesday, October 29, 2013

குஜராத்தில் முஸ்லிம் மாணாக்கர்களை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பு!

அஹமதாபாத்: குஜராத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முஸ்லிம்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ஹீரா மோமின் என்ற ஐந்து வயது முஸ்லிம் சிறுமியை அஹமதாபாத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க சிறுமியின் பெற்றோர் விண்ணப்பித்தனர். ஆனால் இப்பள்ளி நிர்வாகம் "முஸ்லிம் மாணாக்கர்களுக்கு இப்பள்ளியில் இடமில்லை" என்று கூறி அச்சிறுமியை பள்ளிக்குள் சேர்க்க அனுமதி மறுத்து விட்டது.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி அப்பள்ளி மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment