முஸஃபர் நகர்: கலவரம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் பிஜிநோர் தொகுதி பா.ஜ.க.. எம்.எல்.ஏ. கன்வர் பர்தேந்து சிங்கை போலீஸ் கைது செய்துள்ளது.
15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கன்வர் பர்தேந்து சிங், முஸஃபர் நகர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்படும் 3-வது பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆவார். சங்கீத் சோம், சுரேஷ் ராணா ஆகிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பர்தேந்து சிங் உட்பட 16 நபர்களுக்கு எதிராக கலவரம் தொடர்பாக ஜாமீன் இல்லாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதேவேளையில் முஸஃபர் நகர் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 405 ஆகும்.
No comments:
Post a Comment